பலருக்கு பல யோகங்கள் ஜாதகங்களில் பரவிக் கிடக்கின்றன.
ஆனால் ஒரு யோகமும் வேலை செய்ய வில்லை ஏன்??
யோகம் யோகம் என்று சொல்லியே ஒருவனை யோகமற்றவனாக்கி விடுகிறதே என்று அங்கலாய்க்கின்ற
னர்.அவதிப்படுகின்றனர்.
தர்மகர்மாதிபதி யோகம் , குருச்சந்திரயோகம், கஜகேசரி யோகம், குரு மங்கலயோகம், சந்திர மங்கள யோகம் ,அஷ்டலட்சுமியோகம், பர்வதயோகம், புஷ்பமாலிகா யோகம் இப்படி பலயோகங்கள் ஒரே ஜாதகத்தில் இருந்தும் ஒரு யோகமும் தரவில்லையே? நாம் குண்டுச்சட்டிக்குள் இன்னும் குதிரையோட்டுகிறோமே எனக் கோபப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஜாதகத்திலேயே பரவிக் கிடக்கின்றன.
1.முதலில் ஜாதகத்தில் யோக கிரகதிசை இன்னும் வரவில்லை
2.யோக கிரகம் ஜாதகத்தில் வலிமை குன்றி தன் சக்தியை இழந்திருக்கும்
3.அஸ்தமனம் ஆன கிரகம் பலன் தராது.
4.நீசம் மற்றும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் ஜாதத்திலேயே வலுப்பெற்றுள்ளதா என ஆய்வு தேவை.
5.யோககிரகங்கள் யுத்த கிரகங்களில் சிக்கி வலுவின்றிப் போகக்கூடாது.
6.யோகம் தரும் நிலை பெற்ற கிரகம் பகை கிரக சேர்க்கை பார்வையில் சிக்கக் கூடாது.
7.யோக கிரகம் பாப கர்த்தாரியில் சிக்கி அவஸ்தையாகக் கூடாது.
8.யோக கிரகம் பகைசாரம் கூடாது.
9.யோக கிரகம் 6, 8, 12ல் மறைவானாலும் தனக்குக் கிடைக்கும் யோகம் சார்ந்தவர்களை நோக்கிச் செல்லும்.ஜாதகருக்கு இல்லை
10.யோக கிரகங்கள் திதி சூன்ய ராசிகளில் நின்றாலும், கிரகமே திதி சூன்யம் பெற்றாலும் பலன் தருவது சிரமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக